search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவஸ்தானம் அறிவிப்பு"

    திருப்பதியில் ஒரே நாளில் இலவச தரிசனம் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #tirupati
    திருப்பதி:

    திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்வதற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு), சர்வ தரிசனம் (இலவச தரிசனம்) என பல வகையான தரிசன முறை அமலில் உள்ளது.

    இதில் இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், காத்திருப்பு அறைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் தரிசன முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், தரிசன டோக்கன் வழங்கப்படும். இதற்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியதாவது:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டோக்கன் மூலம் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியும். இந்த டோக்கன் முறை தரிசன அட்டை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

    இலவச தரிசனத்திற்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

    இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    தரிசன நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன் முறையானது, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் திவ்ய தரிசனத்திற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tirupati
    ×